உள்ளூர் செய்திகள்
.

சேலம், நாமக்கல்லில்லில் சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு தேர்வு

Published On 2022-05-16 09:15 GMT   |   Update On 2022-05-16 09:15 GMT
சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு தேர்வில் நாளை ஒரே நாளில் 11 பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
சேலம்:

இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி நாளை  (17-ந்தேதி) செவ்வாய்க்கிழமை தெலுங்கு, காஷ்மீரி, ஜப்பானீஸ், ஸ்பானீஸ், மியூசிக் உள்பட  11 பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு இந்த தேர்வு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைகிறது.
Tags:    

Similar News