உள்ளூர் செய்திகள்
வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் திடீர் என்று முற்றுகையிட்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (எ) வெற்றி வயது ( வயது25).
இவருக்கும் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுஉள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், 2 நாட்களுக்கு முன் அந்த பெண் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் வாலிபர் வெற்றியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வாலிபரை தாக்கிய பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் நேற்று வாழப்பாடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையிட்டவர்களை வாழப்பாடி போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.