உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

Published On 2022-05-15 09:36 GMT   |   Update On 2022-05-15 09:36 GMT
திருவாரூர் அருகே குடும்ப பிரச்சனையில் 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றார்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெறுகின்றனர்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு, கொரடாச்சேரியை ஒன்றியம் குளிக்கரையை அடுத்த கடமங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அனுப்ரியா (32). இவரது கணவர் விஜய் (38). விஜய் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. 

இவர்களுக்கு பாலஸ்ரீ (11), மதுஸ்ரீ (7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அனுப்பிரியாவின் பிறந்த ஊர் நாகை மாவட்டம் மருதூர் ஆகும். மாமனார் மற்றும் மாமியார் காரைக்குடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக கொரடாச்சேரியை ஒன்றியம் குளிக்கரையை அடுத்த கடமங்குடி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். வெளிநாட்டிலுள்ள விஜயும் அனுப்பிரியாவும் செல்போனிலேயே சண்டை போட்டுக் கொள்வார்களாம்.

நடத்தையில் சந்தே கப்பட்டு கணவன் சண்டை போடுகிறார் என மனமுடைந்த அனுப்பிரியா சம்பவத்தன்று இரவு தனது இரண்டு மகள்களுக்கும் விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். மூவரும் வாந்தி எடுத்துக்கொண்டு மயக்கநிலையில் இருந்ததை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூவரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கொரடாச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News