உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும். வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...உம்ரான் மாலிக் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தால்... கம்ரான் அக்மல் கருத்து