உள்ளூர் செய்திகள்
சிவகிரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பு
சிவகிரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர்.
சிவகிரி:
சிவகிரி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மதிய வேளையில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் பத்திர பதிவு செய்ய வந்த அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி ராஜா, நிலைய அலுவலர் போக்குவரத்து பார்வதிநாதன், மணிவண்ணன், ஆனந்தமுருகன் ஆகியோர் இணைந்து 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு பிடித்து சென்றனர். இதனால் பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.