உள்ளூர் செய்திகள்
மரணம்

குழந்தை பிறந்த 20 நாளில் பெண் மர்ம மரணம்

Published On 2022-05-12 11:06 GMT   |   Update On 2022-05-12 11:06 GMT
குன்றத்தூர் அருகே குழந்தை பிறந்த 20 நாளில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி செல்வி(34). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குன்றத்தூர் போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே செல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News