உள்ளூர் செய்திகள்
பரணி வித்யாலயா பள்ளிக்கு விருது வழங்கப்பட்ட காட்சி.

பரணி வித்யாலயா பள்ளிக்கு விருது

Published On 2022-05-12 10:20 GMT   |   Update On 2022-05-12 10:20 GMT
பரணி வித்யாலயா பள்ளிக்கு விருது கரூர் பரணி வித்யாலயா பள்ளிக்கு சிறந்த சி.பி.எஸ்.சி. பள்ளிக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கரூர்:

பிரபல தனியார் நிறுவனம் அண்மையில் நடத்திய சிறந்த பள்ளிக்கான கள ஆய்வில் கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி பல்வேறு பிரிவுகளில் கொங்கு மண்டலத்தின் சிறந்த சி.பி.எஸ்.இ. பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. 

மேலும் சிறந்த கல்விசார் சிறப்பு பள்ளி, பெற்றோர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் பள்ளி, உறைவிட பள்ளி, சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட பள்ளி, வாழ்க்கை திறன் கல்வி கற்பித்தலில் சிறந்து விளங்கும் பள்ளி, சிறந்த கற்பித்தல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த மாதிரி பள்ளி ஆகிய பிரிவுகளில் சிறந்த பள்ளிக்கான இவ்விருதை பெற்றுள்ளது. 

சிறந்த பள்ளிக்கான விருது பெற்றதை தொடர்ந்து பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மாவதி மோகனரங்கன், நிர்வாககுழு உறுப்பினர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வெற்றிக்கு உறுதுணையாகவும் மென்மேலும் இதுபோன்ற வெற்றிகளை பெறுவதற்கு சிறப்பாக வழிகாட்டி கொண்டு இருக்கும் பரணி கல்விக்குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, முதன்மை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை பாராட்டி பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News