உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாம்பு கடித்து சிறுவன் பலி

Published On 2022-05-11 09:38 GMT   |   Update On 2022-05-11 09:38 GMT
பழவூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியானான்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் பழவூர் அருேக உள்ள மாடன்பிள்ளை தர்மத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் அப்பகுதியில் கோழி பண்ணை வைத்துள்ளார்.

அந்த பண்ணையில் மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த குரு என்பவர் குடும்பத்துடன்  தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

நேற்று அவரது 1 வயது மகன் ஓயன் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது அவனது காலில் பாம்பு கடித்தது.

தனது காலில் ஏதோ கடித்துவிட்டதாக கூறி அந்த சிறுவன் அழுது கொண்டு இருந்துள்ளான். உடனே குரு அங்கு ஓடி சென்று மகனை பார்த்துள்ளார்.

 எறும்பு ஏதேனும் கடித்து இருக்கும் என்று கூறி, சிறுவனின் அழுகையை சமாதானப்படுத்தி கூட்டி சென்றுள்ளார். பின்னர் இரவு சிறுவனின் வாயில் இருந்து நுரை தள்ளி உள்ளது.

உடனே அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News