உள்ளூர் செய்திகள்
தண்டையார்பேட்டை அருகே ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை
தண்டையார்பேட்டை அருகே ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டையார்பேட்டை மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவர் முருகன். 56 வயதான இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சர்க்கரை நோய் காரணமாக வலது கால் அகற்றப்பட்ட நிலையில் மனமுடைந்து முருகன் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றியவர் ஆவார்.