உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

நெருப்பு ஆற்றில் நடப்பது போல் உள்ளது ஆசிரியரின் பணி யோகா நிகழ்ச்சியில் பேராசிரியர் பேச்சு

Published On 2022-05-10 08:03 GMT   |   Update On 2022-05-10 08:03 GMT
ஆசிரியர்களுக்கு பயம் கூடாது. துணிந்தால் மட்டுமே செயல் நடக்கும்.
திருப்பூர்:

தனியார் யோகா அமைப்பு சார்பில் திருப்பூர் கருவம்பாளையம்அறிவுத்திருக்கோவிலில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் மகளிர் நல மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. 

உடலினை உறுதி செய், உள்ளத்தனையது உயர்வு  எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் பேராசிரியர் கணேசன் பேசுகையில், 

உடல் நலமாக இருக்க முதலில் மனம் நலமுடன் இருக்க வேண்டும். நமக்கான பதில் கிடைக்க வேண்டுமெனில் எதையும், எந்த இடத்திலும் சொல்லவோ, கேள்வி கேட்கவோ தயங்காதீர்.குழப்பத்தை தவிர்க்கவே கீதை போதிக்கப்பட்டது. 

ஒவ்வொருவரும் உணர்வுகளை புரிந்து கொண்டு சிந்தித்தால், வாழ்வு சிறக்கும். நெருப்பு ஆற்றில் நூல் பாலத்தில் நடப்பது போல் உள்ளது இன்றைய ஆசிரியரின் பணி.ஆசிரியர்களுக்கு பயம் கூடாது. துணிந்தால் மட்டுமே செயல் நடக்கும். அதை எதிர்கொள்ளும் உறுதி வேண்டும். 

வாழ்வில் சிறக்க நல்ல மனம் முக்கியம். மனம் இயங்கினால் மட்டுமே செயல் நடக்கும் என்றார்.
Tags:    

Similar News