உள்ளூர் செய்திகள்
நன்னிலம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள தலையூர் கோவில்பத்து முத்துகுமார் என்பவரின் தரிசு வயலில், நாகை மாவட்டம், திட்டச்சேரி தேவங்குடி கீழத்தெரு நடேசன் மகன் ஜீவானந்தம் இறந்து கிடந்தார்.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெடுங்குளம் மேலத் தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து தங்கி இருந்தார்.
கடந்த 4-ம் தேதியில் இருந்து ஜீவானந்தத்தை காணவில்லை. இந்நிலையில் இவர், தலையூர் முத்துகுமார் என்பவரின் தரிசு நிலத்தில் 7-ம் தேதி இரவு இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சங்கர், பேரளம் போலீசில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து, ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த ஜீவானந்தத்திற்கு, வளர்மதி என்ற மனைவியும், விஸ்வானி என்ற மகளும் உள்ளனர்.