உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாணியம்பாடி அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2022-05-08 08:32 GMT   |   Update On 2022-05-08 08:32 GMT
வாணியம்பாடி அருகே ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்
ஜோலார்பேட்டை,

கேத்தாண்டப்பட்டி வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபர் அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அடிபட்டு பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் கருப்பு நிறம் உடையவர் கருப்பு நிற பேண்ட், காப்பி கலர் நிக்கர் அணிந்து உள்ளார். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News