உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சப்னா, பவானி முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதலில் சென்றார்.
இவருக்கு பதிலாக எடப்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.