உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
திருச்சி:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் மன்னார்புரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறும் வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சியில் உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளியை சேர்ந்த விவசாயி ஜெயராஜ் தேர்வு செய்யப்பட்டு,
தரமான விதை உற்பத்தி பற்றிய பயிற்சியளிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலிருந்து 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேளாண் துறை துணை இயக்குனர் மோகன் தலைமையில், எள், கடலை, நெல், மக்காச்சோளம் முதலான விளைச்சலில் தரமான விதைகள் உற்பத்தி, மற்றும் சந்தைப் படுத்துதல் பற்றிய 30 நாட்கள் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.