உள்ளூர் செய்திகள்
பொதுக்கூட்டம்

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம்

Published On 2022-05-03 07:20 GMT   |   Update On 2022-05-03 07:20 GMT
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொன்னேரி:

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் தச்சூர் கூட்டு சாலையில் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.

வர்த்தக அணி செயலாளர் வி. என். பி. வெங்கட்ராமன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் துளசிதாஸ், தலைமை கழக பேச்சாளர்கள்ரா ஜேந்திரன், போதிச்சந்தர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஓம் சக்திகுணபூபதி, ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் சந்தானலட்சுமி, எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் கவுன்சிலர்கள் பானு பிரசாத், சுமித்ரா குமார்., செல்வழகி எர்ணாவூரான், அம்மா பேரவை செயலாளர் சீனிவாசன், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், பா. சங்கர், எம்.வி. தமிழ ரசன், ஆரணி புலவர் வதனைய்யா, மங்கலம்,டி. வெங்கடேசன், ஐ.டி.ஐ எஸ். ரவி, ஏ. டி. நாகராஜ், கஜேந்திரன், முருகன், வக்கீல் ஈஸ்வரமூர்த்தி, அம்மா மக்கள் சேவை மைய மேலாளர் கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News