உள்ளூர் செய்திகள்
வாணியம்பாடி பாலாற்றில் ஆண் பிணத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி- சென்னாம்பேட்டை பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆங்காங்கே மணல் தோண்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, அங்கு 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் ஒருவர் பிணமாக மிதந்தார். அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று தண்ணீரில் மிதந்த உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த பகுதியில் பெருமளவு மணல் கடத்தல் தொழில் நடப்பதால் அங்கு மணல் கடத்தல் காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக யாராவது கொலை செய்து வீசப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.