உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாலிபர் தீக்குளிப்பு

Published On 2022-04-29 09:45 GMT   |   Update On 2022-04-29 09:45 GMT
குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்தார்

திருச்சி:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் ஊராட்சியிலுள்ள ஓசரப்பள்ளியை”சேர்ந்தவர் முத்துசாமி (வயது 42) எலக்ட்ரிசீயன்.  இவரது மனைவி சுபாஷினி.
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன. ஆனால் அவர்களுக்கு குழந்தையில்லை. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இதனால் மனவிரக்தியில் இருந்த முத்துசாமி சம்பவத்தன்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முதலுதவிக்குப் பின் மேல்சிகிச்சைக்காக முத்துசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News