உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஏலகிரி மலையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-04-21 10:20 GMT   |   Update On 2022-04-21 10:20 GMT
ஏலகிரி மலையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலை அடுத்த கொட்டையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஏலகிரி மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் பேரில் ஏலகிரி மலை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். 

அங்கு ஒருவர் தனது வீட்டின் பின்புறம் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசார் வருவதைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார். 

போலிசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News