உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலகமக்கள் நலமாக வாழ்ந்திடவும், பருவமழை நன்கு பெய்து பசுமை வளம் சிறக்கவும் வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை கமிட்டியினரான கீதாசெல்வமாரியப்பன், சக்திவேல் மற்றும் கவுன்சிலர் சுரேஷ்குமார் மற்றும் விழா கமிட்டியினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.