உள்ளூர் செய்திகள்
இளையராஜாவின் கருத்தை சர்ச்சை ஆக்க கூடாது- ஜி.கே.வாசன் அறிக்கை
ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் இளையராஜாவுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இசைஞானி இளையராஜாவின் கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல. இசைஞானி இளையராஜா தனது இசைத்திறமையால் தமிழ்நாட்டின் புகழை, இந்தியாவின் புகழை இசையின் மூலம் உலக அளவில் நிலைநாட்டி, பரப்புவது பெரிதும் பாராட்டத்தக்கது. பொதுவாக ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது.
இந்த நிலையில் இது போன்ற கருத்துக்கு அரசியல் சாயம் பூசி சர்ச்சையாக்குவது சரியல்ல. தேசியத் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பாராட்டுவதும், புகழ்வதும் புதிதல்ல, தவறல்ல. எனவே இசைஞானியின் சொந்த கருத்து சர்ச்சையாக்கப்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இசைஞானி இளையராஜாவின் கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல. இசைஞானி இளையராஜா தனது இசைத்திறமையால் தமிழ்நாட்டின் புகழை, இந்தியாவின் புகழை இசையின் மூலம் உலக அளவில் நிலைநாட்டி, பரப்புவது பெரிதும் பாராட்டத்தக்கது. பொதுவாக ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது.
இந்த நிலையில் இது போன்ற கருத்துக்கு அரசியல் சாயம் பூசி சர்ச்சையாக்குவது சரியல்ல. தேசியத் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பாராட்டுவதும், புகழ்வதும் புதிதல்ல, தவறல்ல. எனவே இசைஞானியின் சொந்த கருத்து சர்ச்சையாக்கப்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.