உள்ளூர் செய்திகள்
செங்கோட்டையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை இயக்கம் தொடக்கம்
நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின் கீழ் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை பணி தொடங்கியது.
செங்கோட்டை:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கத்தை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதியில் இருந்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நமது மருத்துவ மனை மகத்தான மருத்துவ மனை என்ற மாபெரும் சுகாதார திட்டத்தின் கீழ் செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் புறநோயாளிகள் பிரிவில் வெளிப்புற சுவர்களை செங்கோட்டை நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி சக்திவேலின் சொந்த செலவில் வெள்ளையடித்து வர்ணம் தீட்டப்பட்டது.
அவருக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கத்தை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதியில் இருந்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நமது மருத்துவ மனை மகத்தான மருத்துவ மனை என்ற மாபெரும் சுகாதார திட்டத்தின் கீழ் செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் புறநோயாளிகள் பிரிவில் வெளிப்புற சுவர்களை செங்கோட்டை நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி சக்திவேலின் சொந்த செலவில் வெள்ளையடித்து வர்ணம் தீட்டப்பட்டது.
அவருக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.