search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senkottai"

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலை மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்காவிற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இணைப்பு சாலை

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும்.

    ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் விஷ சந்துக்கள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    போர்க்கால அடிப்படையில்....

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இது தொடர்பாக மாலைமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது.
    • இப்போட்டியில் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.

    செங்கோட்டை:

    தென்காசி ஐ.சி.ஐ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ் வளா்ச்சித்துறை சார்பில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது. இப்போட்டியில் நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.

    இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியா் சுதாநந்தினி பள்ளியின் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். வெற்றி பெற்ற மாணவியையும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியா் பிரபாகரன், அதற்கு உறுதுணையாக இருந்த லதா ஆகியோரை பள்ளி நிர்வாகி கணேஷ்ராம், பள்ளிச்செயலா் தம்புசாமி, பள்ளிக்குழு உறுப்பினா் மணிகண்டன், ஆசிரியா்-ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

    • மாணவர்கள் பள்ளி செல்வதற்கும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்வதற்கும் நகர பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
    • போதுமான அளவிற்கு நகர பஸ்களும், பஸ் உள்ளே நிற்பதற்கு போதுமான இடங்கள் இருந்தாலும் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கி செல்கின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமபுறங்களில் இருந்து செங்கோட்டை மற்றும் இலஞ்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்வதற்கும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்வதற்கும் நகர பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

    போதுமான அளவிற்கு நகர பஸ்களும், பஸ் உள்ளே நிற்பதற்கு போதுமான இடங்கள் இருந்தாலும் காலை, மாலை நேரங்களில் இந்த மாணவர்கள் முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் தொங்கி செல்கின்றனர். இதனை பார்ப்போர் நெஞ்சை பதபத வைக்கிறது.

    குறிப்பாக செங்கோட்டையில் இருந்து சுரண்டை, கடையநல்லூர், தெற்குமேடு, கற்குடி, தென்காசி, குற்றாலம் செல்லும் பஸ்களில் இந்நிலை காணப்படுகிறது. எனவே மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணத்தை தடுக்க அனைத்து நகர பஸ்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறையினரும் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது.
    • அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்த கரடி

    குறிப்பாக மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் மேக்கரை வனச்சரக உதவி அலுவலர் அம்பலவாணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ராஜபுரம் காலனியில் முகாமிட்டனர். அப்போது அங்கிருந்த குளத்தின் அருகே 100-நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தவர்கள் சிலர், கரடியை பார்த்ததாக வனத்துறை யினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி ஆய்வு செய்ததில் ராஜபுரம் காலனி பகுதியில் கரடியை கண்டறிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து கரடியை அங்கிருந்து ஓட செய்தனர். அதனை பண்பொழி திருமலை கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

    • கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு தகுதியான இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கினார்.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ராமசந்திரன், வேல்முருகன், செல்லப்பன், வாசுதேவன், ஜெயகுமார், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், கார்த்திக், ரவி, முத்து குட்டி சேவக பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது.
    • இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவி நயினார் அணைக்கு செல்லும் பகுதியில் அமை ந்துள்ளது மேக்கரைக்குளம். இந்த குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. மேலும் அடவிநயினார் அணைக்கு செல்லும் பிரதான சாலையின் கற்கள் பெயர்ந்து வயல்வெளிகளில் நிரம்பி உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லுார் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னா் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அச்சன்புதுார் பேரூராட்சிமன்ற தலைவா் டாக்டா் சுசிகரன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டலத் தலைவா் கந்தசாமி பாண்டி யன், பேரூர் செயலாளா்கள் முத்துக்குட்டி, கார்த்திக்ரவி, முன்னாள் பேரூர் செயலாளா் முத்தழகு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவா் ஞானராஜ் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மேக்கரை கிளை செயலாளா் செய்யதுஉசேன், வார்டு செயலாளா்கள் சின்னக்கனி, ராசையா, விவசாயிகள் ஆறு முகப்பாண்டி, முகம்மது பாரூக் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • கருப்பசாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

    விழாவில் கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. அதனைத்தொடா்ந்து அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகள் ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி நடைபெற்றது.
    செங்கோட்டை:

    கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்தும் விதமாக செங்கோட்டை நகராட்சியில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கு காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் ஏற்பாட்டில் எளிய முறையில் பயிற்சியாளர்களை கொண்டு ஒவ்வொரு வார இறுதி நாளான சனிக்கிழமையில் இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்பு வாணியர் சமுதாய மண்டபத்தில் நடைபெறுகிறது. 

    இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி வகுப்பினை நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் தொடங்கி வைத்தார். இவர்களுக்கு பயிற்சியாளர் ராஜா பயிற்சி அளித்தார். இதில் செங்கோட்டை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராஜீவ் காந்தி உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம் நாளை முதல் இயக்கப்படுகிறது.
    நெல்லை:

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும்  தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது சிறப்பு ரெயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களாகவும் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை-செங்கோட்டை, நெல்லை-திருச்செந்தூர் ரெயில்கள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவுக்கு முன்பாக நாளொன்றுக்கு 4 முறை திருச்செந்தூர், செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த இந்த பயணிகள் ரெயில், கொரோனாவுக்கு பின்னர் காலை, மாலை என 2 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் நெல்லையில் இருந்து காலை 7.20 மணிக்கு ரெயில் புறப்பட்டு 9.05 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.

    இதேபோல் நெல்லை-செங்கோட்டை இடையே நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும், மறுமார்க்கமாக மாலை 5.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 2 வழித்தடங்களிலும் ரெயில்களை பழையபடி 4 முறை இயக்கவேண்டும் என்றும், இதனால் வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, தென்காசி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் தென்னக ரெயில்வே சார்பில் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயில்(06662) காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, காலை 8.50 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.

    இதேபோல் மறுமார்க்கமாக நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில்(06657) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரெயில்களில் 10 பொது பெட்டிகளும், 4 சிலீப்பர் பெட்டிகளும் என மொத்தம் 14 பெட்டிகள் இடம்பெற்றுள்ளது. இந்த ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

    இதில் நெல்லை-செங்கோட்டை மாலை ரெயில் நாளை முதலும், செங்கோட்டை-நெல்லை காலை ரெயில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதலும் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்(06674) காலை 9 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக மாலையில் 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் அந்த ரெயில்(06677) இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் போய் சேருகிறது. இந்த 2 பயணிகள் ரெயில் நாளை முதல் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    செங்கோட்டை அருகே சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே  உள்ள சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு இருந்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் முன்னிலை வகித்தார்.

    தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி மற்றும் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் தலைவர் சரவணன் மூலிகை மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் பற்றி துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரையாற்றினார். உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள், பசுமைஇலத்தூர் மற்றும் பசுமைவலசை ஆர்வலர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

     மாசு இல்லாத வாகனத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பொருட்டு கழுநீர்குளம் கிராமத்தை சேர்ந்த சிறுமி அப்னதஸ்ஸின், சிறுவன் ரெஸ்மான்செய்ன் பேட்டரியால் இயங்கும் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சுற்றுச்சூழலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி இலத்தூர் லட்சுமிஅரிகரா உயர்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது.
    தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட செங்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.
    செங்கோட்டை:

    தமிழ்நாட்டில் தென்மாவட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடியில் தென்காசி மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 800 ஏக்கர்  பரப்பளவில்  சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

    மேற்குதொடர்ச்சி அடிவார பகுதியான செங்கோட்டை தாலூகா வுக்கு உட்பட்ட செங்கோட்டை நகர்பகுதி, கணக்கபிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் சித்திராபுரம், நெடுவயல், அச்சன்புதூர் சிவராமபேட்டை, கொடிகுறிச்சி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் ஆண்டுதோறும்  சாகுபடி செய்யப்படுகிறது. இதனைநம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதி விவசாயிகள் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஆகிய முன்று மாதங்களில் பூமகசூலான வெங்காயம்,  மல்லி, துவரை, மோச்சை, பயறு வகைகள் உள்ளிட்ட வைகளை தென்மேற்கு பருவமழையை நம்பி பயிரிடுவர்.

    அவற்றுள் பெரும்பாலானோர் 70 நாள் பயறும் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்வது வழக்கமாக செய்துவருகின்றனர்.

     ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட 600கிலோ தேவை, இதற்கான உள்ளி விதைகளை திண்டுக்கல் பகுதிகளிலிருந்து ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கிவந்துள்ளனர். இவ்வாறு பயிரிட சாராசரியாக உழவு, பாத்தி கெட்டுதல், இயற்கை உரம் என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்கின்றனர்.

    70 நாட்களுக்கு பின் ஒரு ஏக்கருக்கு 7000 முதல் 7200 கிலோ சின்ன வெங்காயம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பாண்டில் தென்காசி மாவட்டத்தில் 800 ஏக்கருக்கு மேல் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்தனர்.

     இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் சின்ன வெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் பயிறுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

    பெரும்பாலானோர் இயற்கை உரங்களான மண்புழு, எறுசாணம், வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணை உள்ளிட்டவையே உபயோகித்து வருவதால் இங்கு விளையும் சின்ன வெங்காயத்திற்கு மதிப்பு கூடுதல் என்பதால் வியாபாரிகள் வாங்கி செல்வதில் அதிகளவில் ஆர்வம்  காட்டிவருகின்றனர்.
    ×