உள்ளூர் செய்திகள்
சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்ற காட்சி.

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை

Published On 2022-04-18 10:06 GMT   |   Update On 2022-04-18 10:06 GMT
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

 இதனையொட்டி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

பிறகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

 பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார். விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Tags:    

Similar News