உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நெல் கொள்முதல் மைய அலுவலருக்கு அபராதம்

Published On 2022-04-13 06:52 GMT   |   Update On 2022-04-13 06:52 GMT
நெல்கொள்முதல் மையத்தில் முறைகேட்டில் ஈடுப்பட்ட மைய அலுவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை நெல் கொள்முதல் மைய அலுவலருக்கு தரக்கட்டுப்பாடு அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டது.

 உப்பிலியபுரம் பகுதிகளில் இயங்கி வரும் நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலின் பேரில், சென்னை நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு தலைமை அலுவலர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் மையத்தில் தரம் மற்றும் அளவுகளில் முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மைய கொள்முதல் அலுவலர் கார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தலைமை தரக்கட்டுப்பாடு அலுவலரின் திடீர் வருகையால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News