உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்த காட்சி.

பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-04-12 09:22 GMT   |   Update On 2022-04-12 09:22 GMT
பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் மேற்கு சந்தைகேட் அருகிலுள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (13-ந் தேதி) நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு ஸ்ரீ பகவதி அம்மனுக்கு அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், பக்தர்கள் ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றிலிருந்து பால் குடம், தீர்த்தக்குடம், சந்தன குடம், எடுத்து காட்டுப்புத்தூர் முக்கிய வீதி வழியாக வீதி உலாவந்து கோவிலை அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து சிறப்பான யாகசாலை பூஜைகள் நடைபெற்றதுகும்பாபிஷேக விழா ஏற்பாடு-களைவிழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News