உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புகையிலை விற்பனை செய்த வியாபாரி கைது

Published On 2022-04-09 09:53 GMT   |   Update On 2022-04-09 09:53 GMT
சிவகிரியில் கடையில் புகையிலை விற்பனை செய்த வியாபாரி ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:

சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள பள்ளிவாசல் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த சுமார் 42 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கடை உரிமையாளர் ரவி (வயது 50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News