உள்ளூர் செய்திகள்
.

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Published On 2022-03-29 10:52 GMT   |   Update On 2022-03-29 10:52 GMT
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிதல், கார்களில் செல்வோர் ஷீட் பெல்ட் அணிதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துக்கள் போன்ற சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலைக் குழுவினர் எமதர்மன் மற்றும் சித்ரகுப்தன் வேடமிட்டு வாகன ஓட்டிக ளிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தினர்.

குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் ரவிகுமார், குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.
Tags:    

Similar News