உள்ளூர் செய்திகள்
முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பங்குனி விழா
திருத்துறைப்பூண்டியில் உள்ள முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பங்குனி விழா நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஸ்ரீமுள்ளாச்சி மாரியம்மன் கோவில் 78 &ம் ஆண்டு பங்குனி விழாவில் மலர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விடையாற்றி ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஊஞ்சலில் சிறப்பு மலர் அலங்காரத்தில் இருந்த அம்பாளை தரிசித்தனர். கோவிலுக்கு வந்த 600 பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் மலர் வணிக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.