உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தனியார் நிறுவன அலுவலருக்கு கத்திகுத்து-வாலிபர் கைது

Published On 2022-03-26 09:45 GMT   |   Update On 2022-03-26 09:45 GMT
ஆறுமுகநேரியில் தனியார் நிறுவன ஊழியர் பைசோன் என்பவரை கத்தியால் குத்திய வாலிபர் முத்துராஜாவை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ராஜமண்ணியபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் பைசோன் (வயது 54). இவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். தினசரி காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இதன்படி நேற்று முன்தினம் இரவு பஸ்சில் ஆறுமுகநேரி பஜாருக்கு வந்த அவர் அதன் பின் சைக்கிளில் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜமண்ணியபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ் (26) என்பவர் மேலும் ஒருவருடன் சேர்ந்து பைசோனை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.

பின்னர் 2 பேரும் அவரை உருட்டுக்கட்டையால் மாறி மாறி அடித்துள்ளனர்.

மேலும் முத்துராஜ் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கும்போது தடுக்க முயன்ற பைசோனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த பைசோன் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பைசோனை தாக்கிய முத்துராஜா கைது செய்தனர்.
Tags:    

Similar News