உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மூதாட்டியிடம் நகை திருட்டு

Published On 2022-03-23 09:59 GMT   |   Update On 2022-03-23 09:59 GMT
மூதாட்டியிடம் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருச்சி:

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சுந்தரி (வயது 73). புத்தூர் பகுதியில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலுக்கு சுந்தரி சாமி கும்பிட சென்று இருந்தார்.

பிறகு சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக சுந்தரி உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News