உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஏர்வாடியில் திருட்டில் ஈடுபட்டவர் கைது

Published On 2022-03-17 09:59 GMT   |   Update On 2022-03-17 09:59 GMT
ஏர்வாடியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி :

பாவூர்சத்திரம் குறும்பலா பேரி மாதங் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்மதுரை (வயது28) ஆவார்.

இவர் மீது 40&க்கும் மேற்பட்ட திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் தளபதிசமுத்திரத்திலுள்ள இசக்கியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.

அத்துடன் ஏர்வாடி ஜோசப் ஆனந்த் என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்ட சம்பவம் ஏர்வாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதனால் குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சேர்ம துரை கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News