உள்ளூர் செய்திகள்
வாலிபர் பிணம்

விழுப்புரம் அருகே கிணற்றில் வாலிபர் பிணம்

Published On 2022-03-12 11:07 GMT   |   Update On 2022-03-12 11:07 GMT
விழுப்புரம் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:

விழுப்புரம் அருகே உள்ள ஏழுசெம்பொன் என்ற ஊரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் இளங்கோவன்(வயது 38). இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த 2 வருடத்தில் அவரது மனைவி இறந்து விட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இளங்கோவன் சென்னையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6-ந் தேதி சொந்த கிராமத்துக்கு சென்று வருவதாக சொல்லி விட்டு வந்தவர் ஊருக்கு வரவில்லையாம்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை அதே ஊரை சேர்ந்த துளசிநாதன் என்பவரது விவசாய கிணற்றில் இளங்கோவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கெடார் போலீசார் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கானகாரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News