உள்ளூர் செய்திகள்
பேட்டையில் வாலிபர் மண்டை உடைப்பு-தொழிலாளி கைது
பேட்டையில் வாலிபர் மண்டையை உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பேட்டை சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த தொழிலாளி சண்முகம் (36) என்பவர் அங்கு வந்துள்ளார்.
அவர், உனது அண்ணனை எங்கே? என்று கேட்டு பாலச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சண்முகம் உருட்டு க்கட்டையால் பாலச்சந்திரனின் தலையில் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து படுகாயமடைந்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.
பேட்டை சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த தொழிலாளி சண்முகம் (36) என்பவர் அங்கு வந்துள்ளார்.
அவர், உனது அண்ணனை எங்கே? என்று கேட்டு பாலச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சண்முகம் உருட்டு க்கட்டையால் பாலச்சந்திரனின் தலையில் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து படுகாயமடைந்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.