உள்ளூர் செய்திகள்
தேனியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
தேனி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது
தேனி:
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகில் உள்ள குள்ளபுரம் வரதராஜநகரை சேர்ந்த வசந்தசெல்வி என்பவரிடம் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து 2 பேர் அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றனர்.
இதே போல பி.டி.ஆர். காலனியை சேர்ந்த சந்திரா என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து எஸ்.பி. பிரவீண் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர்கள் சதீஸ், திவான்மைதீன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் மதுரையைச் சேர்ந்த பாண்டியன் (வயது 28), சென்னை தாம்பரத்தை சேர்ந்த லோகநாதன் (28) ஆகியோர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவரவே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகில் உள்ள குள்ளபுரம் வரதராஜநகரை சேர்ந்த வசந்தசெல்வி என்பவரிடம் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து 2 பேர் அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றனர்.
இதே போல பி.டி.ஆர். காலனியை சேர்ந்த சந்திரா என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து எஸ்.பி. பிரவீண் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர்கள் சதீஸ், திவான்மைதீன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் மதுரையைச் சேர்ந்த பாண்டியன் (வயது 28), சென்னை தாம்பரத்தை சேர்ந்த லோகநாதன் (28) ஆகியோர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவரவே அவர்களை போலீசார் கைது செய்தனர்.