உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருஆவினன்குடிநகர் கருமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

Published On 2022-03-10 06:14 GMT   |   Update On 2022-03-10 06:14 GMT
இன்று கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
திருப்பூர்:

திருப்பூர் சிறுபூலுவபட்டி, திருஆவினன்குடி நகரில் ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 16-ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது. 

காலையில் மூகாம்பிகை காலனி, ஸ்ரீ துர்கா விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு, சிறுபூலுவபட்டி வழியாக திருஆவினன்குடி நகர், ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் வந்தடைந்தது. அதன்பின் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம் பூஜை நடந்தது. 

நேற்று மாவிளக்கு எடுத்து வருதல், கருமாரியம்மனுக்கு பொங்கல வைத்தல் நடைபெற்றது. இன்று கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 
Tags:    

Similar News