உள்ளூர் செய்திகள்
விஜய் வசந்த்

குமரி மாவட்ட மீனவர்கள் கைது- மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய் வசந்த்

Published On 2022-03-09 10:49 GMT   |   Update On 2022-03-09 10:49 GMT
இந்தோனேஷிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மத்திய அரசை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் அந்தமான் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் விசைப்படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது அவர்களது விசைப்படகு இந்தோனேஷியா கடல் எல்லைப் பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து கடலோர காவல் படை போலீசார் விசைப்படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்தனர். 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இந்தோனேஷிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மத்திய அரசை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News