உள்ளூர் செய்திகள்
உணவு பாதுகாப்புதுறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
திருவாரூரில் உணவு பாதுகாப்புதுறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புதுறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, உணவு பொருட்களின் தரம், கலப்படம், காலாவதி குறித்து புகார்களை வாட்ஸ்ஆப் எண் 9444042322 மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். மாவட்ட நியமனஅலுவலர் எண் 9894545728, மற்றும் அவரது மின்னஞ்சலை பயன்படுத்தியும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உணவு பாதுகாப்புதுறையின் விழிப்புணர்வு ஒட்டு வில்லை களை கலெக்டர் வெளியிட்டார். இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்பு துறையின் நியமனஅலுவலர் சௌமியா சுந்தரி மற்றும் உணவு பாதுகாப்புதுறை வட்டார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.