உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

நெல்லை சந்திப்பு பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2022-03-03 10:13 GMT   |   Update On 2022-03-03 10:13 GMT
பராமரிப்பு பணி காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் நாளை மறுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  

மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளை களை அகற்றி மின் பாதை பராமரிக்கப்படுகிறது.  

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணர்பேட்டை, இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சர்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு மற்றும் சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News