உள்ளூர் செய்திகள்
மீட்பு

பல்லாவரத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மீட்பு

Published On 2022-02-24 09:14 GMT   |   Update On 2022-02-24 09:14 GMT
பல்லாவரத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை மீட்ட போலீசார், இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

பல்லாவரம், சர்ச் தெருவில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதையடுத்து பல்லாவரம் சப்-இன்ஸ்பெக்டர் ரமாபிரபா மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News