உள்ளூர் செய்திகள்
கைது

வாடகை வீட்டில் விபசாரம்- 2 அழகிகள், வாலிபர் சிக்கினர்

Published On 2022-02-24 06:47 GMT   |   Update On 2022-02-24 06:47 GMT
பூதப்பாண்டி அருகே வாடகை வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 அழகிகள், வாலிபர், கேரள பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அரைகுறை ஆடையுடன் இருந்த 2 பெண்களையும் வாலிபர் ஒருவரையும் போலீசார் பிடித்தனர்.

மீட்கப்பட்ட 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ஒருவர் ஆரல்வாய்மொழி பகுதியை என்பதும் மற்றொருவர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட அழகிகள் இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட வாலிபரையும் பெண் புரோக்கரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட பெண் புரோக்கர் கேரளாவைச் சேர்ந்த பிரியா (வயது 40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வாலிபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் பிரியா கடந்த வாரம்தான் செண்பகராமன்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து உள்ளார். கேரளா மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அழகிகளை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்துள்ளது. வாடிக்கையாளர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வருவது போல் பல நபர்கள் இங்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் பிரியாவிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

Tags:    

Similar News