உள்ளூர் செய்திகள்
ஒரு மேஜைக்கு ஒரு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு
ஒரு மேஜைக்கு ஒரு சிசிடிவி கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. பள்ளியில் உள்ள கீழ்தளத்தில் 13 மேஜைகளில் எண்ணப்பட்டது.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மேல்தளத்தில் உள்ள 13 மேஜையிலும் தனித் தனியாக சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
இதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மற்ற பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர்.