உள்ளூர் செய்திகள்
சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளிய காட்சி.

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா

Published On 2022-02-13 08:18 GMT   |   Update On 2022-02-13 08:18 GMT
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
களக்காடு:

களக்காடு ஸ்ரீசத்திய வாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் ஆகியோர் கோவிலில் இருந்து வாகனத்தில் எழுந்தருளி விழா நடைபெறும் தெப்ப குளத்திற்கு வந்தனர்.

பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி சுற்றி வந்து காட்சி அளித்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். 2-ம் நாளான நேற்று இரவில் களக்காடு வரதராஜபெருமாள் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

 3-ம் நாளான இன்று களக்காடு சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவில் தெப்ப விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தெப்ப திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News