உள்ளூர் செய்திகள்
நான்கு வழிப்பாதை பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனரிடம் கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழிப்பாதை பணிகளின் முன்னேற்றம் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்கனருடன் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழிப்பாதை பணிகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனருடன் விஜய் வசந்த் எம்.பி., அவரது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு முழு மூச்சுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கைகளுக்கு கோரிக்கை விடுப்பேன் எனக் கூறினார்.