உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவிக்க போலீசார் வேண்டுகோள்

Published On 2022-01-28 08:32 GMT   |   Update On 2022-01-28 08:32 GMT
கரூர் அருகே தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து முதலீடு தொகை கிடைக்காதவர்கள் பொருளாதார குற்றப்பரிவில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்:

கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டம் ஜவகர் பஜார் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் முதலீடு செய்த தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் மேற்படி நிறுவனத்தில் கருணாகரன் என்பவர் பணத்தை வைப்பீடு செய்தும், முதிர்வு தேதி முடிந்தவுடன் பணம் கேட்டும் திருப்பி தராமல் மேற்படி நிறுவனம் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உடனடியாக அந்த தனியார் நிதி நிறுவனம் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டது.

மேலும் மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து முதலீட்டு தொகை திரும்ப கிடைக்காதவர்கள் இருப்பின் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News