உள்ளூர் செய்திகள்
யானை பலி

பந்தலூர் அருகே யானைகள் மோதலில் ஒரு யானை பலி

Published On 2022-01-27 10:14 GMT   |   Update On 2022-01-27 10:14 GMT
பந்தலூர் வனப்பகுதியில் 2 யானைகள் மோதிக்கொண்டன.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பந்தலூர் இரும்பு பாலம் அருகே உள்ள வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக பந்தலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அங்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த யானை சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், உடலில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த காயம் இருப்பதும் யானைகளுக்கு ள்  ஏற்பட்ட மோதலில் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. 

தொடர்ந்து இன்று கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறு ஆய்வு செய்த பின் இறப்பு குறித்து தெரியவரும் என்றும்,  அதன்பிறகு புதைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News