உள்ளூர் செய்திகள்
உழவர் வயல்வெளி பள்ளி நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

உழவர் வயல் வெளி பள்ளி நிகழ்ச்சி

Published On 2022-01-25 09:59 GMT   |   Update On 2022-01-25 09:59 GMT
பரமத்திவேலூர் அருகே உள்ள மேல்சாத்தம்பூர் கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி நடைபெற்றது.
பரமத்திவேலூர்:

தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்ட திருமணி முத்தாறு உபவடிப்பகுதி திட்டத்தின் கீழ்  உழவர் வயல்வெளி பள்ளி மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.

இதில் மக்காசோளம் பயிரில் விதைப்பு முதல் அறுவடை பின் செய்நேர்த்தி வரை உள்ள சாகுபடியில் மேற்கொள்ளும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வழங்கிட 6 வகுப்புகள் நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி  விதை தேர்வு, விதையின் மூலம் பரவும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து விளக்கமளித்து விதை நேர்த்தியின் பயன்களை எடுத்து கூறினார்,

 துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா, அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Tags:    

Similar News