உள்ளூர் செய்திகள்
மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இருந்து சுமார் 200 காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின.
குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.