உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

உயர் அழுத்த மின்பாதைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-25 09:31 GMT   |   Update On 2022-01-25 09:31 GMT
உயர் அழுத்த மின் பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டை  அடுத்த எலச்சிபாளையம் அருகே உள்ள மொரங்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுண்டாங்கிபாளையம் அருந்ததியர் காலனியில் 100-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊரின் தெற்கு பகுதியில் உள்ள தனிநபர் ஒருவரின் கோழிப் பண்ணைக்கு மின்சார வசதி ஏற்படுத்துவதற்காக, சுண்டாங்கிபாளையம் காலனி வழியாக, அரசம் பாளையம் மின்மாற்றிக்கு உயர்மின் அழுத்த பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. 

அவ்வாறு அமைத்தால், குடியிருப்புகளில் உள்ள மின்சாத பொருட்கள் அடிக்கடி பழுதடைய வாய்ப்புள்ளது. மேலும் மாரியம்மன் கோவிலில் பண்டிகை காலங்களில்  உயர்மின் அழுத்தம் பாய்ந்து உயிர் சேதாரம் ஏற்படவாய்ப்புள்ளது.

எனவே ஊரின் அருகே வேறுபாதையில் உயர்மின் அழுத்த கம்பங்கள் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கலெக்டர், மின்சார வாரியம் உள்ளிட்டவற்றில் மனு அளிதனர்.

இதை தொடர்ந்து அப்பகுதிமக்கள் குடியிருப்பு பகுதியில் உயர்மின்அழுத்த பாதை அமைவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News