உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

நெய்வேலி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு சந்தை மதிப்பை விட அதிகம் பணம் தர வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2022-01-25 06:09 GMT   |   Update On 2022-01-25 06:09 GMT
நெய்வேலி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு சந்தை மதிப்பை விட அதிகம் பணம் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிலம் கையகப்படுத்தியபோது நிலம் கொடுத்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர பணி வழங்கவில்லை என்பது நிதனது சொந்த நிலத்தை, விளைநிலத்தை, தங்களின் குடும்பத்தை காப்பாற்ற பயன்படுத்தும் வீட்டை கொடுக்க முன்வரும் நபருக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் வழங்கினால் தான் நல்லது.

தற்போது தமிழக அரசின் சார்பில் வெளிவந்திருக்கும் அறிவிப்பானது ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதாவது என்.எல்.சி.க்கு நிலம் வழங்குவோரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்க முடியாது என் பதை மறுபரிசீலனை செய்து நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பைவிட உயர்த்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News