உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

செஞ்சி பகுதியில் வேகமெடுக்கும் கொரோனோ

Published On 2022-01-23 09:13 GMT   |   Update On 2022-01-23 09:13 GMT
செஞ்சி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு தலைமை காவலர் மற்றும் காவலர் ஆகியோருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்று 3-வது ஒரு காவலருக்கும் மேலும் போக்குவரத்து காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செஞ்சி:

செஞ்சி பகுதியில் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. செஞ்சி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு தலைமை காவலர் மற்றும் காவலர் ஆகியோருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்று 3-வது ஒரு காவலருக்கும் மேலும் போக்குவரத்து காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு செஞ்சி தாசில்தார் கொரோனோவால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செஞ்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஜீப் டிரைவர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் செஞ்சி பேரூராட்சி சார்பில் நகர வீதிகளில் தடுப்பு மருந்துகள் அதிக அளவில் தெளிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News